சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நபர் ஒருவரைக் கொலை செய்து அவரது சடலத்தை அடையாளம் காண இயலாதவாறு துண்டு துண்டாக வெட்டி குப்பைக் கிடங்கில் வீசிய ஆசிய நாட்டவர் ஒருவரை 12 மணி நேரத்திற்குல் சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்தவரும், பலியானவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களாவர். பலியானவர் 40 வயது மதிக்கத்தக்கவர் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இவர் அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தவராவார்.
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட உடல் உறுப்புகளை கண்டறிவதற்கு 1500 டன் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது. இக் கொடூரமான குற்றவாளியை கைது செய்ய இரண்டு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டு இறுதியில் 12 மணி நேரத்திற்குல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறுகள்தான் கொலை செய்யும் அளவுக்கு துாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.