Ads Area

இலங்கையில் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற முடிவை வாபஸ் வாங்கியது சுகாதாரத் துறை.

பொதுவெளிகளில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அறிவித்த தனது முந்தைய முடிவை சுகாதார அமைச்சகம் மாற்றியுள்ளது.

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமில்லை என்றும்  ஆனால், பொது போக்குவரத்து மற்றும் உட்புற செயல்பாடுகளின் போது முகமூடிகளை அணிய வேண்டும் என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அமைச்சரின் முந்தைய அறிவிப்பை மாற்றியமைத்து சுகாதார அமைச்சகம் இன்று புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் பாரிய பொதுக் கூட்டங்களை கருத்தில் கொண்டு முகமூடி அணிவதற்கான கட்டாயத் தேவையை நீக்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்பு நடைமுறையில் இருந்தபடி வெளியில் முகமூடிகளை அணிய வேண்டும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

புதிய முடிவு இன்று, 21 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe