Ads Area

பயப்படாதீர்கள், எனது பதவியை நான் இராஜினாமா செய்ய மாட்டேன் - பிரதமர் மஹிந்த தெரிவிப்பு.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை என மாகாண சபைக் குழுவின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். தற்போதைய தேசிய நெருக்கடியை குறுகிய காலத்தில் தீர்க்க முடியும் என நம்புவதாக பிரதமர் மேலும் கூறினார்.

அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற மாகாண சபைக் குழுவின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என மாகாண சபையின் பிரதிநிதிகள் பிரேரணை ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, மாகாண சபை குழுவின் பிரதிநிதிகள் தமது பிரேரணையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவிக்கவும் தீர்மானித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டியது அவசியமானது என பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

(நியூஸ் வயர்)



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe