Ads Area

கல்முனையில் மண்ணெண்ணெய் பெற மக்கள் மிக நீண்ட கியூ வரிசை.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனையில் உள்ள எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்லும் அவலத்தை தொடர்ந்தும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அந்த அடிப்படையில், தமது அடிப்படைத்தேவைகளைப் பெறுவதற்கு மக்கள் பல அசௌகரியங்களை தொடர்ந்தும் எதிர்நோக்குகின்றனர். 

இன்று செவ்வாய்க்கிழமைக்கிழமையும் கல்முனையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் கலன்களுடன் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் அதாவது, அதிகாலை 5 மணி முதல் வெயில் என்றும் பாராது, நள்ளிரவு தாண்டியும் வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்றுச் செல்கின்ற மக்களிடையே, "இந்நிலை எப்போது சீராகுமோ" என அங்கலாய்க்கின்ற வாசகங்களையும் கேட்கக் கூடிதையும் அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe