சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் எந்தவித சட்டபூர்வமற்ற முறையில் போலியாக பணிப்பெண்கள் அலுவலகம் ஒன்றை நடாத்தி வந்த 3 ஆசிய நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் குவைத்தில் போலியான பணிப்பெண்கள் அலுவலகத்தினை ஆரம்பித்து அதன் மூலம் சட்டவிரோதமாக பெண்களை பணிக்கு அமர்த்தி வந்துள்ளனர்.
இதேவேளை குவைத் அஹ்மதி பகுதியிலும் போலி பணிப்பெண் அலுவலகம் நடத்தி வந்த 3 வெளிநாட்டினரையும் குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் குவைத் ஹவாலி பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த வெளிநாட்டுப் பெண் பிச்சைக்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்..
இவர்கள் மீது தற்போது குவைத் பொலிஸார் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.