தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் உள்ள ஃபர்வானியா காவல் துறையினர் குவைத்தில் ஒழுக்கக்கேடான விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஆசிய நாடுகளில் ஒன்றைசேர்ந்த 5 பெண்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 ஆசிய பெண்களோடு சில அரபு நாட்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட அனைவரும் மீதும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குவைத் காவல்துறை தெரிவித்துள்ளது.