சம்மாந்துறை அன்சார்.
குவைத் அஹ்மதி பகுதியில் உள்ள பஹஹீல் வீதியில் இந்தியர் ஒருவர் நிர்வாணமாக திரிந்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். குவைத் பொலிஸார் குறித்த நபரை கைது செய்யும் போது அவர் வித்தியாசமான மனநிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை போதைப் பரிசோதனை மற்றும் மருத்துவ பரீசோதனைக்களுக்காக வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.