எதிர்வரும் 21ம் திகதி முதல் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கு அமைய, வாகனங்களை வைத்திருப்போர், fuelpass.gov.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசித்து தேசிய எரிபொருள் அட்டைக்காக தங்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.