Ads Area

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன தெரிவித்தவை.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நாட்டுக்குத் தேவையான எரிபொருட்கள் அடுத்த சில நாட்களில் வந்து சேரும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இன்று (16) அதிகாலை ஒரு டீசல் கப்பல் நாட்டிற்கு வந்துள்ளதுடன், அதற்கான தரம் மற்றும் மாதிரி சோதனை தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இன்று பிற்பகுதியில் மற்றுமொரு டீசல் ஏற்றுமதி வரவுள்ளதாகவும்  அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த வாரம் ஜூலை 18 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் பெற்றோல் ஏற்றுமதி நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மூன்று எரிபொருள் கப்பல்களுக்கு ஏற்கனவே முழுமையாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாக காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe