Ads Area

இளைஞர் யுவதிகளுக்கான சமூக ஒத்திசைவு மற்றும் நிலைத்தன்மை பயிற்சி பட்டறை !!!

 சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

ஆசிய மன்றத்தின் அனுசரணையில் கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் “இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தல்" எனும் தலைப்பில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மூவின இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை அண்மையில் காரைதீவு லேடி-லங்கா மண்டபத்தில்  நடைபெற்றது.

கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் அவர்களின்  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வளவாளராக எம்.றசாட் கலந்து   கொண்டு பல்வேறு குழுச்செயற்பாடுகளும், பங்குபற்றலுடன் கூடிய ஆளுமை விருத்தி தொடர்பான பயிற்சிகளும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கப்சோ நிறுவனத்தின் கள உத்தியோகத்தர்களான இஸ்மத், சுமன், மற்றும் ஜப்ரான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe