Ads Area

ஜனநாயகப் போராட்டத்திற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை கண்டிக்கிறேன் - ஹரீன்.

எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக “கோத்தாகோகம” வளாகத்தில் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாபெரும் ஜனநாயகப் போராட்டத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட சட்டவிரோத பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை நான் வெறுக்கிறேன் மற்றும் வன்மையாக கண்டிக்கிறேன் என அமைச்சர் ஹரீன் தெரிவித்துள்ளார்.

நான் திரு. ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்துகொண்டேன், அது வரவிருக்கும் பேரழிவைத் தோற்கடிப்பதற்காகவே, யாரையும் காப்பாற்றுவதற்காக அல்ல.

வரவிருக்கும் பேரழிவை தோற்கடிக்கும் அதே வேளையில், இந்தப் போராட்டத்தை வெல்வதில் ஒன்றுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe