மலேசியா, இந்தோனோஷியா ஆகிய நாடுகளில் இன்று (ஆக.23) நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் வடகிழக்கு இன்று இரவு 8 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது . இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவானதாக அந்நாட்டு தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போன்று இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. இந்த இரு நிலநடுக்கங்கள் காரணமாக உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.