Ads Area

பொது வசதிகள் குழுவின் புதிய உறுப்பினராக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.கலீலுர்ரஹுமான் தேர்வு

பாறுக் ஷிஹான் 

கல்முனை மாநகர சபையின் புதிய பொது வசதிகள் குழு உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் பிரபல அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர்ரஹுமான் தெரிவாகியுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் 55வது அமர்வு கடந்த புதன்கிழமை (26) மாலை இடம்பெற்ற வேளை, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டார்.

கல்முனை மாநகர சபையின் பொது வசதிகள் குழு உறுப்பினராக இருந்து கடந்த 2022.09.15ம் திகதியன்று அமரத்துவமடைந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை புவனேஸ்வரியின் வெற்றிடத்திற்கு இவர் தெரிவானார்.

பொது வசதிகள் குழு உறுப்பினர் வெற்றிடத்தை  சபையில் மாநகர பொது வசதிகள் குழு தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான  ஹென்றி மகேந்திரன் சுட்டிக்காட்டி இருந்ததுடன், புதிய உறுப்பினரைய் தெரிவு செய்வதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.

இதன் போது, கல்முனை மாநகர சபையின் புதிய பொதுவசதிகள் குழு உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் பிரபல அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர்ரஹுமான் சக கட்சி உறுப்பினரால் பிரேரிக்கப்பட்டதுடன், சபையும் ஏகமனதாக ஏற்று குறித்த பதவிக்கு புதிய உறுப்பினரை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe