சவுதி பல்கலைக்கழகளில் உள்ள மாணவர்களுக்கு சவுதி யோகா கமிட்டி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக யோகா கற்றுக்கொடுத்து வருகிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா ஜெனரல் அசெம்ளியில் பிரதமர் மோடியின் ஆலோசனைக்கேற்ப ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அப்போது 177 ஐநா நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து சர்வதேச யோகா தினத்தன்று உலக நாடுகள் பலவற்றில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் யோகா செய்யத் துவங்கினர். சவுதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகா கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

