இலங்கையில் 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 14 ஆயிரத்து 309 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . வெள்ளம் மற்றும் மண்சரிவால் மூவர் பலியாகியுள்ளனர்.இருவர் காணாமல்போயுள்ளனர்.
5 வீடுகள் முழுமையாகவும் 207 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. ஆயிரத்து 660 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 36 பாதுகாப்பான இடங்களில் 5 ஆயிரத்து 383 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.