Ads Area

இரட்டை குடியுரிமை கொண்ட எம்பிக்களை இராஜினாமா செய்ய வேண்டும்! தேர்தல்கள் ஆணைக்குழு.

இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்ற தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட முடியாது. 

நாடாளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழு, அத்தகையவர்களை உடனடியாக இராஜினாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது. 

எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும்போது இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவ்வாறான வேட்பாளர்கள் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்கினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe