ஹூரூப் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இக்காமாவை புதுப்பிக்க முடியாமல் தாய்நாடு செல்ல முடியாமல் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் ஜித்தாவில் உள்ள இந்திய துணை தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்பவர்கள் இரண்டு நாட்களுக்குள் இந்திய துணைத் தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய துணை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வாய்ப்பை தூதரக இணையதளத்தில் முன் பதிவு செய்தவர்களும், முன் பதிவு செய்யாதவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் தகவலுக்கு 055 612 2301 என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் மூலம் இந்திய துணை தூதரகத்தை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இறுதி வெளியேறும் விசா - பதிவு படிவம்
http://cgijeddah.org/consulate/exitVisa/reg.aspx