கொழும்பு, டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியால், தேசியமட்ட "TOP 05" பதக்கம் வழங்கப்பட்ட சம்மாந்துறை மாணவி ஜெலீல் பாத்திமா மின்ஹாஜை (௦9) நேற்றுக் காலை, புரவலர் ஹாஸிம் உமர் விருது வழங்கி கெளரவித்தார். புரவலரின் கொள்ளுப்பிட்டியிலுள்ள
புத்தகப்பூங்கா அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தினகரன், வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர். புரவலரின் பாரியார் மற்றும் மாணவியின் பெற்றோர்களான ஜெலீல் ஜீ, ஷெய்னம்பு (ஆயிஷா) ஆகியோரும் பங்கேற்றனர்.