Ads Area

அக்கரைப்பற்று பிரதேச சபையில் காய்கறி அறுவடை.

 நூருல் ஹுதா உமர்


ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான "பாதுகாப்பான, முழுமைப்படுத்தப்பட்டஉணவு" என்ற திட்டத்தின் அடிப்படையில் அக்கரைப்பற்று  பிரதேச சபையினுடைய முன்வளாகத்தில் கத்தரி, மிளகாய் போன்ற மரக்கறி வகைகளை  முன்னோட்டமாக (ஒத்திகையாய்) பயிரிடப்பட்டது.. அப்பயிர்களில் இருந்து புதன்கிழமை  காய்கறி அறுவடை நிகழ்வு நடைபெற்றது.


திட்டத்தின் ஒத்திகையில் கிடைத்த பரிபூரணமான திருப்திகளோடு அக்கரைப்பற்று  பிரதேச சபை உலக வங்கியின் உதவியுடன் (LDSP) திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு வட்டாரங்களிலும்  தெரிவு செய்யப்படும் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை ஊக்குவிக்க காய்கறி நடும் திட்டத்தினையும் ஒரு அங்கமாக செயல்படுத்த ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸீக் தெரிவித்தார். மேலும் அறுவடையில் பங்கெடுத்த அக்கரைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எல்லோருக்கும் நன்றிகள் என்றார்.

Slideshow

1 / 4
2 / 4
3 / 4
4 / 4

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe