Ads Area

சம்மாந்துறை சேர்ந்த மீரா மொஹிதீன் தாஹீர் முழுத்தீவுக்குமான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

 ம்மாந்துறை புளக் ஜே கிழக்கு-01ம் பிரிவை சேர்ந்த மீரா மொஹிதீன் தாஹீர் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டு கல்முனை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி ஏ. எம்.முஹம்மட் றியாழ் முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.


வன பரிபாலனத் திணைக்கள வன வெளிக்கள ௨த்தியோகத்தராக கடமையாற்றும் இவர் தனது ஆரம்ப கல்வியையே சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்திலும் ௨யர்தரத்தை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் (தேசிய பாடசாலை) பயின்றுள்ளார்.

மர்ஹும் எஸ்.எல். மீராமுகைதீன் மற்றும் என். சல்ஹா ௨ம்மா ஆகியோரின் மூத்த மகனான இவர் சம்மாந்துறை சமுகநல மேம்பாட்டு ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், தற்போதய பிரதித் தலைவருமாவார். இன்னும் பல சமுகப்பணிகளிலும் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe