நூருல் ஹுதா உமர்
பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நவாஸ் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மருதமுனை கமு/கமு/ அல்- மினன் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட திறந்தவெளி அரங்க திறப்புவிழாவும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய அல்- மினன் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் எஸ்.எச்.எஸ். ஹர்ஜது தலைமையில் பாடசலை திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சமூகநல செயற்பாட்டாளருமான எம்.எஸ்.எம். நவாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம். ஸம்ஸம் மற்றும் விசேட அதிதியாக அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய அல்- மினன் வித்தியாலய மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்று ஆரம்பித்த இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் பல கௌரவிப்புக்களும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேலும் கல்முனை வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்கள், அதிகாரிகள், பாடசலை ஆசிரியர்குழாம், மாணவர்களின் பெற்றோர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.