Ads Area

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் கணினி அறிவியல் துறையின் தலைவராக கலாநிதி அஹமட் றிபாய் காரியப்பர் நியமனம்.

 அஸ்ஹர் இப்றாஹிம்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் கணினி அறிவியல் துறையின் தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த கலாநிதி ஆர்.கே.அஹமட் றிபாய் காரியப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைதென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களினால்  உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசியக்  கல்லூரியின் பழைய மாணவரான இவர் சாய்ந்தமருது திடீர் மரணவிசாரணை அதிகாரி மர்ஹும் அல்ஹாஜ் றாஸிக் காரியப்பர் தம்பதிகளின் புதல்வராவார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe