Ads Area

கல்முனை எல்லையினுள் இயங்கி வருகின்ற தனியார் டியூசன் நிலையங்களுக்கு காதலர் தினத்தன்று பூட்டு.


பாறுக் ஷிஹான்


கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) எதிர்வரும் 14ம் திகதி செவ்வாயன்று (நாளை) பூட்டுமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.


அன்றைய நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்படுவதால், மாணவிகள் மீது பகிடிவதைகள் மற்றும் வேண்டத்தகாத ஒழுங்கீன சம்பவங்கள் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டி பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் விடுக்கும் வேண்டுகோள்களை கவனத்திற்கொண்டே இவ்வறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.


ஆகையினால், அன்றைய தினம் எந்தவொரு டியூட்டரியையும் திறக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் வேண்டுவதாகத் தெரிவித்துள்ளார்.


இதனைக்கண்காணித்து, உறுதி செய்யுமாறு மாநகர சபையின் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், அன்றைய தினம் தங்களது பிள்ளைகளை டியூசனுக்கு அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe