Ads Area

லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் நிந்தவூர் பொலிஸாரால் கைது.



 பாறுக் ஷிஹான்


கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று மாலை நிந்தவூர் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.


 இதற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீம் ஆலோசனையில் சிறுகுற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியும்  உபபொலிஸ் பரிசோதகர் குணரட்ன, பொலிஸ்  விசேட புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்ட நடவடிக்கையினால் சுமார் 50க்கும் மேற்பட்ட லேகியம்  போதைப்பொருட்பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.


 இதன் போது கைதான 73 வயது மதிக்கத்தக்க  சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில ஆஜர்படுத்த  நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe