Ads Area

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் எம்.ஜே.கே.எம்.அர்சத் காரியப்பர் கடமையேற்றார்.

பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்


 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக  சாய்ந்தமருதைச்சேர்ந்த டாக்டர் எம்.ஜே.கே.எம்.அர்சத் காரியப்பர் இன்று (16) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.


 இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய டாக்டர் யூ.எல்.எம். நியாஸ் உள்ளிட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


 கடந்த காலங்களில் கல்முனை மாநகர சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய டாக்டர் எம்.ஜே.கே.எம்.அர்சத் காரியப்பர் மாநகர சுகாதாரப்பிரிவினூடாக பல்வேறு சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன், பாவனைக்குதவாத வகையில் ஒதுக்கப்பட்ட இயந்திரங்களை மீள் பழுதுபார்ப்பினூடாக மக்களுக்கு உதவும் வகையில் மாற்றியமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 முன்னாள் அமைச்சர் கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பரின் பேரனான இவர் வைத்திய மற்றும் சுகாதார சேவைக்கு அப்பால் பிரதேசத்தின் சமூகநலச் செயற்பாடுகளில் டார்க் பௌண்டஷன் எனும் அமைப்பைத் தோற்றுவித்து பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe