Ads Area

தேர்தல் ஒத்திவைக்கப்படினும் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும்.

 ஏதேனும் காரணத்தால் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்ட தேதியில் நடத்த முடியாவிட்டால், பெறப்பட்ட வேட்புமனுக்கள் தேர்தல் நடைபெறும் வரை செல்லுபடியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 2020 இல் கொரோனா தொற்றுநோய்களின் போது முன்னதாகவே பெறப்பட்டதாகவும், ஆனால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட பின்னர், பெறப்பட்ட அதே வேட்புமனுக்களுக்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 


இதனிடையே, வாக்குறுதி அளித்தபடி உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதா என்பதை, நாளை அல்லது நாளை மறுநாள், உயர் நீதிமன்றத்தில் மனு மூலம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணைக்குழு கடந்த 10 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்திருந்தது. 


உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் அன்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தன.


எனினும், அந்த வாக்குறுதியின்படி செயற்படுவதற்கு பணம் கிடைக்கப்பெறாத காரணத்தினால், உயர்நீதிமன்றுக்கு இதுு குறித்து பிரேரணை மூலம் அறிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe