Ads Area

இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" நூலின் அறிமுக விழாவும் விசேட உரையும்.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)


கலாநிதி ரவூப் ஸெய்ன் எழுதிய "இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" எனும் நூலின் அறிமுக விழாவும் விசேட உரையும் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், அம்பாறை மாவட்ட றாபிதத்துன் நளீமியின் தலைவரும் அம்பாறை, சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். இஸ்ஹாக் நளீமி வரவேற்புரையையும் அறிமுக உரையையும் நிகழ்த்துவதோடு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் எம். றமீஸ் அப்துல்லாஹ் நூல் பற்றிய அறிமுகத்தையும் "இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" எனும் தலைப்பில் கலாநிதி ரவூப் ஸெய்ன் விசேட உரையையும் நிகழ்த்தவுள்ளனர்.

அம்பாறை மாவட்ட றாபிதத்துன் நளீமியின் செயலாளரும் கலாசார  உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.ஏ.ஏ. அஸீம் நளீமி நன்றியுரை நிகழ்த்துவதோடு, நிகழ்ச்சி தொகுப்பை அஷ்ஷெய்க் றாபி எம். மப்றாஸ் நளீமி செய்கிறார்.

மேற்படி நூல் காலத்தின் தேவையாகக் கருதப்படுவதால் அனைவரும் கலந்து சிறப்பித்து பயன்பெறுமாறு றாபிதத்துன் நளீமியின் அம்பாறை மாவட்ட கிளையினர் அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கின்றனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe