Ads Area

கடவுச்சீட்டுக்கு விரல் அடையாளம் பெறும் நடவடிக்கை : இன்று முதல் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்பம்.



சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம்


கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் பதிவு செய்யும் பணி இன்று (21) காலை 8.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.


 இந்த நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.


நாடளாவிய ரீதியிலுள்ள 51 பிராந்திய செயலகங்களில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கான விரல் அடையாளத்தைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


 அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் பிரதேச செயலகங்கள் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கான கைரேகை எடுக்கும் பிரதேச செயலகங்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.


 பிரதேச செயலகங்களூடாக நாளாந்தம் சுமார் 765 பேர் கைரேகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe