Ads Area

சம்மாந்துறையில் பஸ் வண்டி விபத்து: கதிர்காம யாத்திரீகர்கள் 10 பேர் காயம் - சாரதி தப்பியோட்டம்.



பாறுக் ஷிஹான், சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம், 


கதிர்காமத்திலிருந்து யாத்திரர்களை ஏற்றிக்கொண்டு அம்பாறை வழியூடாக மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருந்த தனியார் போக்குவரத்து பஸ் இன்று அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகிள்ளது.


இவ்விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதே வேளை, பஸ் சாரதி விபத்து நடந்தவுடன் தப்பியோடி விட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe