சவூதி அரேபியாவின் வடக்கு மாகாணமான காசிமில் உள்ள புரேதாவில் சக ஊழியரை கொன்ற இந்தியாவை சேர்ந்த அப்துராக்கிப் மியாஜுதீன் தூக்கிலிடப்பட்டார். அவரது சக ஊழியரான நசீம் அன்சாரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதுதான் அவர் மீதான வழக்கு. நசீம் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
நீண்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

