Ads Area

சம்மாந்துறை மல்வத்தைப் பிரதேசத்தில் மதுபானசாலை அமைக்க மூவின மக்கள் எதிர்ப்பு..

கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நமது மல்வத்தை பிரதேசத்தில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றை திறப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார்.


அதனை எதிர்த்து மல்வத்தை பிரதேசத்தைச்  சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின மக்களும் பிரதேசத்தின் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து மிகப்பெரும் எதிர்ப்பு பேரணி ஒன்றை 2023.07.05 ம் திகதி  இன்றைய தினம் மல்வத்தை சந்தியில் நடத்தினோம். 


 எமது கோரிக்கை மல்வத்தை  பிரதேசம் என்பது அதிகமாக விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் வாழுகின்ற ஒரு பிரதேசம் என்பதுடன் இப் பிரதேசம் கடந்த கால யுத்தத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்டு தற்பொழுது தான் கட்டம் கட்டமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது.


 இப்பிரதேசம் ஒரு நகரமாவதற்கு எத்தனையோ தேவைகள் இருக்கின்றது.


தொழில் பேட்டைகள், வைத்தியசாலையின் அபிவிருத்தி, பாடசாலைகளின் அபிவிருத்தி, கல்வி 

செயற்பாடுகளில் முன்னேற்றம்  வங்கிகள், கடைத் தொகுதிகள் சந்தை கட்டிடம், கலாச்சார மண்டபம், எரிபொருள் நிரப்பு நிலையம், சத்தோச கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், ஹோட்டல்கள், ஹாட்வெயார்கள் இப்படி எத்தனையோ  தேவைகள் உள்ளது. இவற்றில் ஏதாவது ஒரு வேலை திட்டத்தை  வியாபாரத்தினை தொடங்கலாம்.


ஆனால், அவற்றை எல்லாம் தவிர்த்து பெரிய ஹோட்டல்களோ ரெஸ்டுரன்ட்களோ அதிக சனத்தொகையோ இல்லாத மிகவும் அமைதியாக இருக்கின்ற மல்வத்தை பிரதேசத்தில் 

மதுபான விற்பனை நிலையம் ஒன்றை ஆரம்பிக்க முயல்வது வளர்ந்து வரும் ஒரு பிரதேசத்தை முற்றாக அழிக்க நினைக்கின்ற செயல்படாகும். 


எனவே நாம் இதனை எதிர்க்கின்றோம். இவ்விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.


அரசாங்கமும் மதுவரி திணைக்களமும் ஒருபோதும் இதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனும் தொனியில் இன்றைய தினம் மாபெரும் எதிர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தினோம்.


ஜெய சந்திரன்.

(சம்மாந்துறை முன்னாள் உப தவிசாளர்)







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe