Ads Area

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் இன்று தனது கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

 அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று திங்கட்கிழமை (10) தனது கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

 

மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியுள்ளதோடு, அரச பணியில் உயர்பதவிகளை விகித்துள்ளார்.

 

மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஜே.எம்.ஏ. டக்ளஸ் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதையடுத்து புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.


காரைதீவு சகா.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe