Ads Area

மத்திய முகாம் ஆதார வைத்திய சாலையில் சிரமதான நிகழ்வு!

 நூருல் ஹுதா உமர்.


இலங்கை அடிப்படை உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளரும், நளிர் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான எம்.ஏ. நளிர் தலைமையில் மத்திய முகாம் ஆதார வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு ஒன்று இன்று (2023.07.14) இடம்பெற்றது.

குறித்த சிரமதான நிகழ்வில் மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.கே. பத்திரன, மத்திய முகாம் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி கே. ஐ.இசுறு பொடிக்காற உள்ளிட்ட அதிகாரிகளும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும், ஊழியர்களும் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிரதேச வாசிகளும் கலந்து கொண்டனர்.

இனங்களுக்கிடையே நல்லுறவைப் பேணும் வகையில் எம்.ஏ. நளிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற வேறுபாடுகள் அற்ற முறையில் அனைவரதும் பங்களிப்புடன் இந்த சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

பெருகிவரும் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் வைத்தியசாலை வளாகத்தை சுத்தப்படுத்தும் நோக்கிலும் குறித்த சிரமதான நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்ககது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe