Ads Area

சவூதியில் அதிகரித்துள்ள இந்திய காகங்களை கட்டுப்படுத்த தயாராகும் சுற்றுச்சூழல் துறை..!

 


 ரியாத்: 

சவுதி அரேபியாவில் விருந்துக்கு வந்து திரும்பாத இந்திய காகங்களை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் துறை தயாராகி வருகிறது. தென்மேற்கு கடற்கரை நகரமான ஜிசான் மற்றும் ஃபராசன் தீவுக்கு இடம் பெயர்ந்த இந்திய காகங்கள் மீண்டும் நாடு திரும்பாததால் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.


இந்திய காகங்களின் எண்ணிக்கை அதிகரித்து, தொல்லை அதிகரித்து வருவதால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இந்த காகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் சிறு விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


காகங்கள் சிறு பூச்சிகளை முழுவதுமாக உண்ணுவதால் பல இனங்கள் அழிந்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் காக்கைகள் கூடு கட்டாமல் இருக்கவும், சுற்றுச்சூழல் துறை முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. பல உயிரினங்களின் உயிர்வாழ்வை பாதிக்கும் என்பதால், காகங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe