Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற முகாமைத்துவ பயிற்சிப் பட்டறை.

 நூருல் ஹுதா உமர்.


மனித மேம்பாட்டு அமைப்பு மற்றும் முஸ்லிம் வாலிபர் சங்கம் மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை இளைஞர்களுக்கான 5S முகாமைத்துவம் சம்பந்தமான பயிற்சிப்பட்டறை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது. 


மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும் மாவடிப்பள்ளி YMMAயின் தலைவருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம். அசாத், அகில இலங்கை YMMA பேரவையின் தேசிய உபதலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக வைத்தியசாலையின் திட்டமிடல் அதிகாரி டாக்டர் எ.ஆர்.நியாஸ் அஹமட், அகில இலங்கை YMMA பேரவையின் அப்பாறை மாவட்டப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ், தாதிய பரிபாலகர் டி.எல்.அப்துல் ரசூல், தாதிய பரிபாலகி சாஜிதா எம்.ஜெமீல், தர முகாமைத்துவப் பிரிவினுடைய தாதிய உஸ்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்ஹர், சம்மாந்துறை YMMA கிளையின் தலைவர் எம்.ஆர்.சம்சுதீன், அக்கரைப்பற்று YMMAயின் தலைவர் எ.எ.பைரூஸ், அட்டாளைச்சேனை YMMAயின் செயலாளர் எ.எல்.கியாஸ்டீன் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.


சாய்ந்தமருது, சம்மாந்துறை, நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை போன்ற பிரதேச இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு விரிவுரை மற்றும் செயற்பாட்டு ரீதியிலான பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டனர்.


இப்பயிற்சிப்பட்டறையின் வளவாளராக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தாதிய பரிபாலகி சாஜிதா எம்.ஜெமீல் அவர்களினால் 5S முகமைத்துவம் சம்பந்தமான விரிவுரைகளும் செயற்பாட்டு ரீதியிலான பயிற்சிகளும் நடாத்தப்பட்டதுடன், அன்று மாலை கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe