Ads Area

சவுதி அரேபியாவில் ஒரு வாரத்தில் 7378 பெண்கள் உட்பட 10,482 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்..!

ரியாத்: 


பல்வேறு சட்ட மீறல்களுக்காக பிடிபட்ட 10,482 வெளிநாட்டவர்கள் ஒரு வாரத்திற்குள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 15,114 பேர் பிடிபட்டு நாடு கடத்தப்பட்டனர். இதில் 9538 பேர் குடிவரவு சட்டத்தை மீறியுள்ளனர், 3694 பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர், 1822 பேர் தொழிலாளர் சட்டத்தை மீறியுள்ளனர்.


பல்வேறு நாடுகளை சேர்ந்த 7378 பெண்கள் உட்பட 43,763 பேரின் பயண ஆவணங்கள் அந்தந்த தூதரகங்களில் இருந்து சரிபார்க்கப்பட்ட பின்னர் நாடு கடத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிடிபட்டவர்களில் 65% பேர் ஏமன் நாட்டவர்கள். 33% எத்தியோப்பியர்கள். இந்தியா உட்பட மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்  2% ஆகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe