பொது சமூக சேவைகள் அமைப்பினால் வருடாந்தோறும் இடம்பெறும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் இவ் வருடத்திற்கான (2024)1500 மாணவர்களுக்கு அபியாச புத்தகங்கள் நிகழ்வு கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக 500 மாணவர்களுக்கான புத்தகங்கள் கடந்த வாரம் பிரதேசவாரியாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கான பிரதம அனுசரனையாளராக இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள் காணப்படுவதோடு, இந்நிகழ்வின் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் பொது சமூக சேவைகள் அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச வாரியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கழகங்களின், அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஊடக பிரிவு.
General Community Services Association