சம்மாந்துறை தாறுல் உலுாம் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற வித்தியாரம்ப நிகழ்வின் போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். இர்ஷாட் அவர்களினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒரு தொகுதி மரத்தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை தாறுல் உலுாம் பாடசாலையின் அதிபர் திரு. கலீல் அவர்களின் அழைப்பின் பெயரில் நிகழ்வின் கலந்து கொண்ட தொழிநுட்ப உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். இர்ஷாட் அவர்கள் பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது சொந்த நிதியிலிருந்து குறித்த தளபாடத் தொகுதியினை பாடசாலையின் அதிபரிடம் கையளித்தார்.
பாடசாலையின் அதிபர் திரு. எம்.ஐ.எம். கலீல் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலையக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். செய்யத் உமர் மௌலானா அவர்களும் பாடசாலையின் ஆசிரியர்களும், பெற்றோர்களும் மற்றும் மாணவ-மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக மாணவர்களுக்குத் தேவையான ஒரு தொகுதி தளபாடங்களை தனது சொந்த நிதியிலிருந்து பெற்றுக் கொடுத்த தொழிநுட்ப உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். இர்ஷாட் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.