(எஸ்.அஷ்ரப்கான், கே.ஏ.ஹமீட்)
சம்மாந்துறை 09ம் கிராம சேவகர் பிரிவுக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக்கூட்டம் நேற்று (20) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச்செயலாளர் மன்சூர் ஏ.காதர், பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமா லெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், அரசியல் அதியுயர்பீட உறுப்பினர் ஏ.எம்.ஏ.அஸீஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.