பாறுக் ஷிஹான்.
கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள வை.ஹபீபுல்லாஹ் திங்கட்கிழமை (26) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி உட்பட பிரிவுத்தலைவர்கள், உத்தியோகத்தர்களும் பங்கேறிருந்தனர்.
இதன்போது மாநகர ஆணையாளர் தலைமையில் உத்தியோகத்தர்கள் அனைவரும் பதில் கணக்காளரை வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
கல்முனை வலயக் கல்விப்பணிமனையின் கணக்காளராகக் கடமையாற்றி வருகின்ற ஹபீபுல்லாஹ் அதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.