கல்பிட்டி பிரதேச பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக முதலில் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்ததாகவும், ஆனால் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தான் தனிமையில் இருந்தபோது, மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகளுக்காக வழங்கப்பட்ட டேப் கம்ப்யூட்டரை எடுத்துச் செல்வதாகக் கூறி, சந்தேக நபர் தனது கடமைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டி, தன்னை கையால் பிடித்ததாகவும், சம்பவத்தினால் ஏற்பட்ட மன வேதனையினால் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் மேலும் தெரிவித்தார்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.