சம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பினால் (OCD) சம்மாந்துறை வைத்தியசாலைக்கு மாத்திரை உறைகள் (Tablets Pocket) வழங்கி வைக்கப்பட்டது.
OCD அமைப்பின் தலைவர், சமூக சேவையாளர் விஞ்ஞான முதுமானி அஸ்மி யாசீன் அவர்களிடம் வைத்தியசாலை அபிவிருத்தி நிர்வாக குழுவினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகுதி மாத்திரை உறைகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த மாத்திரை உறைகளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபா அவர்களிடம் வழங்கி வைத்த இந் நிகழ்வில், அமைப்பின் உப தலைவர் கணக்காளர் S.A ஜிப்ரி (SLIAT), OCD அமைப்பின் இணைப்பாளரும், பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான A.M.M. றியாஸ் உட்பட அமைப்பின் ஆலோசகரும், சமுர்த்தி மாவட்ட உத்தியோகத்தருமான A.J.M. ஹனீபா மற்றும் அமைப்பின் ஆலோசகரும், தேசிய சேமிப்பு வங்கி ஓயவுபெற்ற முகாமையாளருமான M.M.M மன்ஷூர் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.