Ads Area

விசாரனைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை மண்வெட்டியால் தாக்கிய சீனப் பெண் கைது.

சம்மாந்துறை அன்சார்.


விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டை விசாரிப்பதற்காகச்  சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மண்வெட்டியால் தாக்கிய விரட்டிய சீனப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


விசா விதிகளை மீறி இலங்கை பேருவளை மங்கள மாவத்தையில் தங்கியிருந்த 36 வயதுடைய சீனப் பெண் ஒருவரை விசாரிப்பதற்காக அவரது இருப்பிடத்திற்குச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது தோட்டத்தில் இருந்த மண்வெட்டியால் பொலிஸ் உத்தியோகத்தர்களை குறித்த சீனப் பெண் தாக்கியுள்ளார்.


குறித்த சம்பவ வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரல் ஆனதைத் தொடர்ந்து தற்போது குறித்த சீனப் பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் நீதி மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி மூலம் - https://www.newswire.lk




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe