இலங்கைப் பெண்களை வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான முன்மொழிவுகளையும் திட்டங்களையும் சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகத்திடம் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று வலியுறுத்தியுள்ளார்.
பெண்களை வீட்டு வேலையாட்களாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நடைமுறையை நிறுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், அதற்கு பதிலாக அதிக ஊதியம் பெறும் திறமையான வகை வேலைகளில் வெளிநாட்டு வேலைகளை தேடுவதற்கு பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் சங்க உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர், இது தொடர்பான முன்மொழிவுகளில் அனைத்து பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றார்.
அடுத்த பத்து வருடங்களுக்குள் வீட்டு வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை முற்றாக நிறுத்துவதும், அதற்குப் பதிலாக திறமையான பிரிவுகளில் வேலை தேடுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதும் இலக்காக இருக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.