Ads Area

வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புர தாஹிரா வித்தியாலய மாணவர்களுக்கு ஐ.எல்.எம். மாஹிரினால் புலமைப் பரிசில் கொடுப்பனவு.

வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் தாஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிரின் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில்  15 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபா தலைமையில் நேற்று இடம்பெற்றது.


இந்நிகழ்வில்  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினால் பாடசாலையினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில்  சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் அறபாத் மொகைடீன், மெளலவி அஷ்ரப், ஒய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் முகம்மட் தம்பி, ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஊடகப்பிரிவு.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe