சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் வருகின்ற 50 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் கல்விசார்,கல்விசாரா ஊழியர்கள், மற்றும் அனைத்து கற்கை நெறி மாணவர்களை கொண்டு 14குழுக்களை ஒன்றினைந்து (05.03.2024-07.03.2024 வரை) மூன்று நாள் சுற்றுப் போட்டி கல்லூரியின் அதிபர் எஸ். தியாகராஜாவின் அனுமதியுடன் விரிவுரையாளர் எம்.ரமனிதரனின் வழிகாட்டலில் மாணவர்கள் ஏற்பாட்டு குழுவினை ஒன்றினைத்து இடம் பெற்றுக்கொண்டு இருக்கிறது.
இந்த நிகழ்வில் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர், விரிவுரையாளர்கள், பழைய மாணவர்கள், கல்லூரியின் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.