காலி தடல்ல கடற்கரையில் காதலர்களை படம்பிடித்து அவர்களின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்து விசாரணையில் தடல்ல கடற்கரைக்கு அண்மித்த புதர்களுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் காதலர்களை அணுகும் சந்தேக நபர், இங்கு தங்க வேண்டாம், பொலிசார் வருவார்கள் என கூறி, அருகிலுள்ள பிறிதொரு புதர் மண்டிய இடத்துக்கு காதல் ஜோடிகளை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த பகுதி அதிக புதர் மண்டி, மறைவான இடங்களை கொண்டதுடன் குறிப்பிட்ட நபர் வீடியோ செய்ய ஏதுவான பகுதி.
அந்த பகுதிக்கு சென்ற காதலர்கள் புதர் மறைவான பகுதியில் மிக நெருக்கமாக இருக்கும் போது, இந்த இளைஞர் மறைந்திருந்து அவற்றை வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோக்களை பணத்துக்காக இணையங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
சந்தேக நபரால் இதுவரை எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட காணொளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை மாணவர்களுடையவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.