Ads Area

சவுதி அரேபியாவில் 5 பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.


சவூதி அரேபியாவில் தனியார் நிறுவனம் ஒன்றினுல் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு அங்கிருந்த இரண்டு காவலாளிகளை தாக்கி அதிலொருவரை கொலை செய்தமைக்காக 5 பாகிஸ்தானியர்களுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்த காவலாளி பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவராவார்.


குறித்த 5 பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேருக்கும் நீதிமன்றத்தினால் மக்கா நகரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


கொலை, பயங்கரவாத செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


செய்தி மூலம் - https://www.saudi-expatriates.com




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe