சவுதி அரேபியாவில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் கடும் மழை பெய்ய கூடும் என சவுதி வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ரியாத் , ஜித்தா மற்றும் சில பகுதிகளில் மிதமான அல்லது லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தபுக் போன்ற பகுதிகளில் கடும் மழை பெய்ய கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
ரியாத் ,காஸிம், ஹாஃப்ர் அல்பதின் போன்ற பகுதிகளில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செவ்வாய் அன்று விடுமுறை அளித்துள்ளது .புதன் கிழமை வரை பலத்த காற்று,மற்றும் மழை, வெள்ளம் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் civil defence எச்சரிக்கை விடுத்துள்ளது.