அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அல்- ஜன்னா பள்ளிவாசலுக்கு நீண்ட கால தேவையாக இருந்த நவீன நேர அறிவிப்பு திரை ஒன்றை வழங்கி வைக்குமாறு பள்ளியின் தலைவர் முகம்மட் நசீர் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் இளைஞர் பிரதிநிதி றிஸ்கான் முகம்மட் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க(14) பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் றிஸ்கான் முகம்மட் அவர்களின் முயற்சியால் நவீன நேர அறிவிப்பு திரை கையளிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும்,முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.